Friday, September 9, 2011

இணையதளத்தில் சமச்சீர் கல்வி புத்தகம்‏


6 முதல் 10 -ஆம் வகுப்புக்கான பாடதிட்டம் சம்மந்தான குழப்பம் முடிவுக்கு வந்த நிலையில் தமிழக அரசு பாட புத்தகங்களை மீண்டும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
 
இந்த இணையதளத்திற்க்கு சென்று பாட புத்தங்களை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
வெளி நாடுகளில் உள்ள பெற்றொர்கள் கவனத்திற்க்கு : உங்கள் பிள்ளைகளின் படிப்பை கண்கானிக்க, இணையதளத்தில் உள்ள புத்தகங்களை பதிவிறக்கம் (Download) செய்து தினமும் தங்கள் பிள்ளை எவ்வளவு படம் படித்து உள்ளது, என அறிந்து கொள்ளலாம், வாரம் ஒரு முறை இந்த புத்தகங்களை வைத்து கொண்டு குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவர்களின் கல்வி திறன் எவ்வாறு உள்ளது என அறிந்து கொள்ளலாம், போதியபாடங்கள் படிக்கவில்லை என்றால் அதிக முயற்சி எடுத்து கண்கானிக்கலாம்.
வெளியூரில் இருந்தாலும் பிள்ளைகளின் கல்வி வளர்சியை கண்கானிக்க இந்த இணையதள புத்தகம் பயனுல்லதாக இருக்கும்.

நன்றி
AIM


அஸ்ஸலாமு அலைக்கும். கீழ்காணும் கடிதத்தைப் படித்து தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




அன்னா ஹசாரே போராட்டம்: சங்பரிவார் மற்றும் அமெரிக்க ஆதரவு அம்பலம்


அன்னா ஹசாரே யின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு அன்னிய நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்பரிவார பயங்கரவாத இயக் கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு தாராளமாக செலவழிப்பதாக ஆதாரப்பூர்வ தகவல் கள் தெரிவிக்கின்றன.

ஹசாரே குழுவினரின் பிரதிநிதியாக செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பான ‘கபீர்’ மூலமாக போராட்டத்திற்கு அந்நிய நிதி வருகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் ‘கபீர்’ அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹசாரேவின் போராட்டத்தை பிரபலப்படுத்த செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஹசாரேவின் போராட்டத்திற்கு பணத்தை இறைக்கின்றன. முன்னாள் இந்தியன் ரெவினியூ சர்வீஸ் பணியாளரான அரவிந்த் கேஜ்ரவால் கார்பரேட்டுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர். ஹசாரேவின் போராட்டத்திற்கு வலைதள உலகிலும் செயற்கையான எழுச்சி பிரச்சாரம் நடைபெறுகிறது. எஸ்.எம்.எஸ், இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியன வழியாக நடத்தப்படும் பிரச்சாரத்திற்கு அரவிந்த் கேஜ்ரவாலுடன் செயல்படும் அஸ்வதி முரளீதரனும், மனீஷ் ஸிஸோடி போன்றோரும் முதுகெலும்பாக செயல்பட்டுள்ளனர்.

தகவல் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ’கபீர்’ என்ற அமைப்பின் எக்ஸ்க்யூட்டிவ் உறுப்பினர்தாம் கேஜ்ரவால். தற்போது ஹசாரேவின் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை இவ்வமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. காந்தியவாதியாக வேடமிடும் அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு அமைப்பாளர்களாக காந்தியைக் கொலை செய்த தேசத்துரோக ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் துணை அமைப்புகளான வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், யுவமோர்ச்சா, ஏ.பி.வி.பி போன்றவை உள்ளன. இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்தாம் ஹசாரேவுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர்.

யூத் எகைன்ஸ்ட் கரப்ட்(ஒய்.எ.சி), இந்தியா எகைன்ஸ்ட் கரப்ட்(ஐ.எ.சி) ஆகிய ஹசாரே ஆதரவு இயக்கங்களை கட்டுப்படுத்துவது சங்பரிவார் அமைப்புகளாகும். ஒய்.ஏ.சி இணை கன்வீனர் கோபால் அகர்வால், ஏ.பி.வி.பியின் தலைவராவார். ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தனது வலைப்பூவில் ஹசாரேவின் பிரச்சார இயக்கத்தை அவசரக் காலக்கட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயாணன் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் நடத்திய போராட்டத்திற்கு ஒப்பீடு செய்கிறார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸும், ஏ.பி.வி.பியும் முக்கியப் பங்கை ஆற்றியுள்ளன. அதுபோலவே ஊழலுக்கு எதிரான இதரப் போராட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அதன் பங்கை வகிக்கும் என ராம் மாதவ் கூறுகிறார்.

ஹசாரேவின் போராட்டத்தை நாங்கள் வெற்றிபெறச் செய்வோம் என வி.ஹெச்.பியின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சலும் தெரிவித்துள்ளார். ஹசாரேவுடன் போராட்டத்திற்கு களமிறங்கப் போவதாக பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரியும் கூறியுள்ளார்.

முன்பு கறுப்புப் பணத்திற்கு எதிராகப் போராட ஹைடெக் யோகா குரு ராம்தேவை களமிறக்கி ஆதாயம் தேட முயன்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் முயற்சியை மத்திய அரசு முறியடித்திருந்தது. தற்போது காந்தியவாதி வேடத்தில் அன்னா ஹசாரே காங்கிரஸ் எதிர்ப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார். இது காவி முகாம் எழுச்சிபெற நடைபெறும் மறைமுக சதித்திட்டமாகவே உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நன்றி
tmmk.in


Wednesday, September 7, 2011

இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு


டெல்லி:இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 180 மில்லியனிற்கு மேலுள்ளதாக யு.எஸ். நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பத்து வருடத்திற்கு ஒரு முறை இந்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், இந்தியாவில் முஸ்லிம்களின் இருப்பு பல காரணிகளை அசைக்கும் தன்மை வாய்ந்ததாக உள்ளதாவும், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அந்த கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த கேபிளில், முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 138 மில்லியன் என்று குறைத்து காட்டப்பட்டுள்ளதாகும், யு.எஸ்.ஸின் கணக்குப்படி அது 180 மில்லியனை தாண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் அசாதாரண நிலைமைகளை விவரிக்கும் அந்த கேபிள் தகவல், டெல்லியில் உள்ள யு.எஸ். தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்திய பொருளாதாரத்தை கட்டுபடுத்தும் அசிம் பிரேம்ஜி போன்ற ஒரு சில முஸ்லிம் பணக்கார முதலைகள் இந்தியாவில் இருந்தும், பெரும்பான்மையான முஸ்லிம் சமூகம் மிகவும் பின்தங்கியே வாழ்வதாக பறைசாற்றியுள்ளது.
ஷாருக்கான் போன்ற திரையுலக ஜாம்பவான்கள் இந்தியாவில் இருந்தும், கோடிக் கணக்கான முஸ்லிம்கள் வறுமையில் தத்தளித்து வருவதாக அக்கேபிள் தகவல் தெரிவிக்கிறது. மேலும், இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்று முஸ்லிம் ஜனாதிபதிகள் பதவி வகித்திருந்தாலும், பாராளுமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2006-ம் வெளியிடப்பட்ட சச்சார் கமிட்டியின் அறிக்கையையும் அந்த கேபிள் உள்ளடக்கியுள்ளது. இந்திய தலித்களின் நிலைமையை விட முஸ்லிம்கள் ஒரு மோசமான போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அது கூறுகிறது.
மத துவேசம், எல்லைப் பிரச்சனை, வெளிநாட்டு அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் முஸ்லிம்கள் துண்டாடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஷியா,சன்னி,பறேல்வி மற்றும் வஹாபிசம் போன்ற உட்பூசல்களையும் அக்கேபிள் விட்டுவைக்கவில்லை

Tuesday, September 6, 2011

15.08.2011 அன்று துபாய் தவ்ஹீத் இல்லத்தில் அறிஞர் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி அவர்கள்
ரமழானுக்கு  பிறகு என்ற தலைப்பில்   உரையாற்றிய சொற்பொழிவின் காணொளி இதே உங்கள் பார்வைக்காக. தயவுசெய்து பொருமையாக இந்த காணொளியை முழுமையாக கண்டு பயனடைய வேண்டுகிறோம்.







Monday, September 5, 2011

விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது


அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் இறுதிப் பயணத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அமெரிக்காவின் விண் ஓடத் திட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த விண் ஒடங்கள் மனிதர்கள் பூமி குறித்தும் பிரபஞ்சம் குறித்தும் வைத்திருந்த புரிதல்களை மாற்றியதாக அடலாண்டிஸ் கமாண்டர் கிரஸ் பெர்குசன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் மொத்தம் ஐந்து விண்வெளி ஓடங்கள் தயாரிக்கப்பட்டன. இவை நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்களையும் ஹப்பில் தொலைநோக்கியையும் ஏவ உதவின.
முதல் முதலாக அமெரிக்க 1983 ஆம் ஆண்டு சேலன்சர் என்ற விண்வெளி ஓடத்தை ஏவியது. அதுவரை விண்வெளி வீரர்களும் - செயற்கைக்கோள்களும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டனர். விண்வெளி ஓடத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச் சிறப்பு.

கல்பனா சாவ்லா

இதுவரை விண்வெளி ஓடங்கள் மூலமாக 135 விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அதேநேரம் விண்வெளியில் இரண்டு விண்வெளி ஓடங்கள் வெடித்துச் சிதறியதால், இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
மொத்தம் உற்பத்தி செய்யப்பட்ட 5 விண்வெளி ஓடங்களில் மற்ற இரண்டு ஏற்கனவே அருங்காட்சியகங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. அட்லாண்டிஸ் விண்கலமும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். மேலும் இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் 4 ஆயிரம் ஊழியர்கள் பதவியிழப்பார்கள்.
அதேநேரம் விண்வெளி ஓடத்துக்கு ஓய்வு கொடுக்கப்படுவதால் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி தடைபடாது என்று நாசா உறுதி கூறுகிறது.
ஆனால் அமெரிக்காவில் தனியார் துறையினரால் செய்யப்படும் ராக்கெட்டுகள் பயன்பாட்டுக்கு வரும் வரை ரஷ்யாவின் சோயஸ் ராக்கெட்டுக்கள் மூலமாகவே அமெரிக்காவின் விண்வெளிப் பயணங்கள் நடைபெறும்.


பூமியில் மோதும் கற்களால் பாதிக்கும் நாடுகள்!

விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். 
சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் மிகுந்த அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், பிலிபைன்ஸ், இத்தாலி, பிரிட்டன், 
பிரேசில், நைஜிரியா ஆகிய நாடுகள் இந்த சிறு கோள்களின் தாக்குதலுக்கு உள்ளானால் அங்கு மிகுந்த உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதினால்ல் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றிலும் அழிவுக்கு உள்ளாகும் என்வும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றாக அழிந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 


மாணவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தெரிந்துகொள்ள வேண்டும்


"இந்தியாவில், அதிகமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தும் மாநிலம் தமிழகம். மாணவ, மாணவியர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும்" என, மாநில தகவல் உரிமை ஆணையர் பெருமாள்சாமி பேசினார்.
ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை சார்பில், "தகவல் அறியும் உரிமை சட்டம்-2005&' என்ற தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
தமிழ்நாடு மாநில தகவல் உரிமை ஆணையர் பெருமாள்சாமி பங்கேற்று பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள், மக்கள் வரிப்பணத்தில் இயங்குகிறது. இப்பணம் முறையாக பயன்படுத்த படுகிறதா என்பதை தெரிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டமானது, 1776ல் சுவீடன் நாட்டில் அறிமுகப்படுத்தபட்டது. இச்சட்டத்தை, காஷ்மீர் தவிர மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 1997ல் அறிமுகபடுத்தப்பட்ட இச்சட்டம், 2005ல் அமல்படுத்தபட்டு செயல்பட்டு வருகிறது. அரசு ஒளிவு மறைவில்லாமல் செயல்படுவதை மக்களுக்கு தெரியப்படுத்துதல், பணியாற்றுபவர்கள் துறையின் பொறுப்பை உணர்ந்து செயல்படவும், ஊழல் இல்லா நிர்வாகத்துக்கு இச்சட்டம் பயன்படுகிறது.
அரசு ஆவணங்களை தகுதிக்கு ஏற்ப முழுமையாக பார்க்க முடியும். இச்சட்டத்தின் மூலம் கேள்வி, விளக்கம், கோரிக்கை, நடவடிக்கை எடுப்பது போன்ற தகவல்களை பெறலாம். யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளை கேட்க முடியாது. அன்றாட பணிகளை பாதிக்கின்ற மாதிரியான கேள்விகளாக இருந்தால், மனுவை தள்ளுபடி செய்யலாம். தகவல் கொடுக்கவில்லை என்றால், அபராதம், தண்டனை உள்ளது. ஆனால், இதன் மூலம் அதிகாரிகளை மிரட்டுபவர்களுக்கு தண்டனை இச்சட்டத்தில் இல்லை. தகவல் கேட்டு, 30 நாட்கள் காத்திருக்கலாம். தகவல் தராத பட்சத்தில் கால தாமதத்துக்கு ஒரு நாளைக்கு, 250 ரூபாய் வீதம், 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். அதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் அடங்குவர்.
இந்தியாவிலேயே அதிகமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தும் மாநிலம் தமிழகம்தான். மாணவ, மாணவியர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Sunday, September 4, 2011

Welcome Message






விண்வெளியில் இருந்து பூமியை நெருங்கும் ராக்கெட்டின் உடைந்த பாகங்கள்; செயற்கை கோளில் மோதும் அபாயம்

பூமியில் இருந்து விண் வெளிக்கு உலக நாடுகள் செயற்கை கோள்களை அனுப்புகின்றன. ராக்கெட் மூலம் செலுத்தப்படும் அவை விண்வெளிக்கு செல்லும்போதும், சென்ற பிறகும் பழுதடைகின்றன. இதனால் உடைந்து நொறுங்கும் ராக்கெட்டின் உதிரிபாகங்களும், செயற்கை கோள்களின் பாகங்களும் காற்று இல்லாததால் விண் வெளியில் பூமியை சுற்றி மிதந்தபடி இருக்கின்றன.
 
அவை மணிக்கு 28,164 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நெருங்கி வருகின்றன. அவை பூமியை நெருங்கி நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள் மீது மோதும் அபாயம் உள்ளது. அவை தவிர சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
 
எனவே ராக்கெட்டின் உடைந்த உதிரி பாகங்கள் மற்றும் இடிபாடுகளை அகற்ற விரைவில் அகற்ற வேண்டிய கட்டாய நிலை உருவாகி உள்ளது.   அதற்கான எச்சரிக்கையை அமெரிக்காவில் உள்ள தேசிய ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
 
பூமியை விண்வெளியில் தற்போது சுமார் 1000 செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்பட்டு செயல் படுவதாகவும், சுமார் 16, 094 உடைந்த பாகங்கள் பூமியை நெருங்கி வருவதாகவும் அந்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. எனவே, ராக்கெட் உடைந்த பாகங்களை அகற்றும் புதிய திட்டத்தை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes