M.M.S. சேக் நசுருதீன் ( தலைவர் – AAMF ) அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
அல் அமீன் பள்ளி நிலைப்பாடு சம்பந்தமாக வருகின்ற 06/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப்பின் நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படுகிற அவசரக்கூட்டதில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகிகளை வரவழைத்து பேசுவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக இதுவரைக் கூட்டப்பட்ட அனைத்துக் கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு என்ன முடிவுக் காணப்பட்டது ? என்ற சகோ. M.S. சிஹாபுதீன் அவர்களின் கேள்விக்கு விளக்கங்கள் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிரை பேரூராட்சிக்கு மூன்று சக்கர வாகனம் வாங்குவதற்காக சம்சுல் இஸ்லாம் சங்கம் துபை கிளை சார்பாக நிதி உதவியாக ரூபாய் 25,000/- பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம் அவர்களிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக அதன் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் “கடற்கரைத் தெரு முஹல்லா“ வின் முக்கியஸ்தர்கள் எனக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இறுதியாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட “கடற்கரைத் தெரு முஹல்லா“ நிர்வாகத்தினற்கு வாழ்த்துகள் பரிமாறப்பட்டு துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.
குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் வீதம் எனவும், இதன்படி அடுத்த கூட்டமாக “ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில்“ வருகின்ற 08-06-2012 அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.