Saturday, December 15, 2012

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஒன்பதாவதுக் கூட்டம் !


இன்று [ 14-12-2012 ] வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் புதுத்தெரு மஹல்லாவில் உள்ள மிஸ்கீன் சாஹிப் மஸ்ஜிதில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஒன்பதாவதுக் கூட்டத்திற்கு  AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் M.B. அபூ பக்கர்,  அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீத், டாக்டர் ஹனீப், முன்னாள் தலைமை ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன் மற்றும் புதுத்தெரு மஹல்லாவைச் சேர்ந்த அபூ பக்கர், பஷீர் அஹமது ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.


நிகழ்ச்சியின் துளிகள்...

1. கிராஅத் : இமாம் ஹாஜா முஹைதீன் அவர்கள்

2. வரவேற்புரை : ஹாஜி ஜனாப்  M. M.S. சேக் நசுருதீன் அவர்கள்.

3. A. முஹம்மது இப்ராஹீம் ஆலிம் அவர்கள் தனது சிறப்புரையில் AAMF'ன் அவசியம் குறித்து பேசினார்கள்.

4. சென்றமாத AAMF'ன் எட்டாவதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரங்கள் இக்கூட்டத்தில் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.



5. AAMF'ன்  பொருளாளர் K.M. பரக்கத் அலி அவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, துணை பொருளாளராக  செயல்பட்டுக் கொண்டிருந்த மான் A. நெய்னா முஹம்மது அவர்கள் புதிய பொருளாளராக தொடர்ந்து செயல்படுவார் என அனைவராலும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

6. தரகர் தெரு ஜமாத் நிர்வாகத்தினரிடேயே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து அவர்களிடேயே சுமூகத்தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் பேசப்பட்டன. இப்பிரச்சனை R.D.O. விசாரணையில் இருப்பதாகவும், விரைவில் சுமூக தீர்வு எட்டும் என்று தாங்கள் நம்புவதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகளின் ஒரு சாரார் தெரிவித்ததையடுத்து, நல்லதொரு தீர்வு விரைவாக நிறைவேற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டன.

7. நமதூரில் சமிபத்தில் நடந்த துன்பியல் நிகழ்வு குறித்து கீழத்தெரு மஹல்லா சார்பாக AAMF'க்கு வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதம் அனைவரிடத்திலும் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் :

பெறுநர் :
தலைமை நிர்வாகிகள்,
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு [ AAMF ]
அதிராம்பட்டினம்

நமதூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற துன்பியல் நிகழ்வு நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல் வேதனை தருவதாகவும் அமைந்துவிட்டது. 

குற்றவாளி காவல்துறையின் பிடியில் இருப்பதால் அவரின் மேல் உள்ள வழக்கு விசாரணையை எவ்வித குறுக்கீடுகள் இன்றி விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து அவருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர அதிரை காவல்துறையை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்ள வேண்டும். இவை பாதிக்கப்பட்டோர் சற்று ஆறுதலடையும் வகையிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமலும் இருப்பதாக அமையும். 

பாரம்பரிய மிக்க நமதூரில் இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடராமல் இருப்பதுக்குரிய முயற்சியில் இப்போதே நாம் கவனம் எடுத்துக்கொண்டு அவற்றை தடுப்பதற்குரிய வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு அதிரை அனைத்து மஹல்லா சார்பாக கட்டுக்கோப்புடன் கூடிய ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றி அவற்றை அனைத்து மஹல்லாவிலும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது அவசிமானதாகும்.

பிள்ளையை இழந்துள்ள அக்குடும்பத்திற்கு பொறுமையையும் மன அமைதியையும் வலிமையையும் கொடுப்பாயாக என்று ஏக இறைவனிடம் பிரார்த்தித்தவர்களாக...

இப்படிக்கு,
தலைமை நிர்வாகிகள்
கீழத்தெரு மஹல்லா – அதிரை

வழக்கு விசாரணையில் இருப்பதால் AAMF'ன் கெளரவ சட்ட ஆலோசகர் சகோ. A.J. அப்துல் ரெஜாக் B.A., B.L அவர்களிடம் மேற்படி நடவடிக்கை குறித்து ஆலோசனைகளைப் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.



8. AAMF சார்பாக நமதூரைச்சுற்றி இருக்கக்கூடிய கிராமங்களாகிய ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மகிளங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, நரசிங்கபுரம், கரையூர் தெரு, பழஞ்செட்டித்தெரு, காந்தி நகர், முத்தம்மாள் தெரு போன்ற கிராம பஞ்சாயத்தார்களை சந்திப்பது என்றும், நம்மிடையே நல்லிணக்கமான சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வருகின்ற ஜனவரி இரண்டாவது வாரத்தின் விடுமுறை தினத்திற்கு பிறகு 'சந்திப்பு' நிகழ்ச்சிக்கு அவர்களை அழைத்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை செயல்படுத்துவதற்காக AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், மான் A. நெய்னா முஹம்மது, சேக்கனா M.  நிஜாம், P.M.K. தாஜுதீன், M.A. அஹமது ஹாஜா, A. முஹம்மது மொய்தீன்,  இஷாக், E. வாப்பு மரைக்காயர் ஆகியோரைக்கொண்ட குழு ஓன்று நியமனம் செய்யப்பட்டுள்ளன. 

9. இன்று [ 14-12-2012 ]  வாகன விபத்தில் மரணம் அடைந்த சிறுவன் நசீமின் மறுமை வாழ்வை அல்லாஹ் வெற்றியாக்கி வைத்து சுவன பாக்கியத்தை வழங்குவானாக என இக்கூட்டத்தில் துஆ செய்யப்பட்டன.

10. AAMF'ன் ஒன்பதாவது கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் M.B. அபூ பக்கர்,  டாக்டர் ஹனீப் ஆகியோர் முதல் முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.

குறிப்பு : 
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு [ AAMF ] சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது மஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவில்"நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ] இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

Saturday, November 17, 2012

அமீரக AAMF–ன் நவம்பா்-2012 மாத செயற்குழு கூட்டம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

இடம்: தலைவா் A.தமீம் ROOM
 தேதி: 16-11-2012

அமீரக AAMF–ன் நவம்பா்-2012 மாத செயற்குழு கூட்டம் தலைவா் A.தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.



அமா்வில் ஆலோசித்து எடுத்த தீா்மானங்கள் :
1)  2013- ஆண்டுக்கான நாள்காட்டி (Calender) அமீரக AAMF சார்பாக கடந்த வருடத்தை போன்று இந்த வருடமும் அச்சிடுவது என முடிவானது. நாள்காட்டி அச்சிடுவதற்கன செலவினங்களை அனைத்து முஹல்லாவும் ஏற்றுக் கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.




2)  நமதுார் தரகா் தெரு முஹல்லா நிர்வாகத்தில் உள்ளவா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, தரகா் தெரு முஹல்லா மக்களுல் ஒரு நல்லணக்கத்தை ஏற்படுத்த அதிரை AAMF துரித நடவடிக்கை எடுக்க அமீரக AAMF வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.



3)  நமதுாரில் அருகில் உள்ள கிராமங்களின் பஞ்சாயத்தார்களை நமது அதிரை AAMF நிர்வாகிகள் சந்தித்து, நமது AAMF –பை அறிமுகம் செய்து, எதிர்காலத்தில் நமக்குல் நல்லிணக்கமான சூழ்னிலைகளை உருவாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்திறோம்.

Wednesday, November 7, 2012

பிலால் நகர் : AAMF – ABM இனைந்து வழங்கிய வெள்ள நிவாரண நிதி உதவி !!!




பிலால் நகர் - நமதூரைச் சேர்ந்த பல்வேறு தெருக்களிலிருந்து குடிபெயர்ந்தோராக ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு பேரில் பெரும்பாலானோர் ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர், வீட்டு வேலை செய்வோர் என குடிசைகளில் வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் சமிபத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்து ஆங்காங்கே வெள்ளக்காடு போல் காட்சியளித்தன. இதையடுத்து பாதிப்புக்குள்ளான வெள்ளப்பகுதிகளை படம்பிடித்து காணொளி வடிவில் நமதூர் வலைதளங்களில் பதிவு செய்து வெளியிடப்பட்டன.

சமூக ஆர்வலரும், AAMF – இலண்டன் கிளையின் ஒருங்கிணைப்பாளருமாகிய சகோ. இம்தியாஸ் அவர்களின் முயற்சியால் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு - இலண்டன் கிளை சார்பாக ரூபாய் 25,725/- வசூல் செய்து அனுப்பி வைத்தனர். இப்பணத்தை பாதிக்கப்பட்ட பிலால் நகர் பொதுமக்களுக்கு AAMF – ABM இனைந்து வழங்கும் வெள்ள நிவாரண நிதி உதவியாக விநியோகம் செய்ய கேட்டுக்கொள்ளப் பட்டதையடுத்து, 

இன்று [ 06-11-2012 ] மாலை சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...




அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை சேர்ந்த தலைமை நிர்வாகிகள் :
ஜனாப் M.M.S. சேக் நசுருதீன் 
ஜனாப் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் 
ஜனாப் K.M. பரகத் அலி
ஜனாப் M.A. அஹமது ஹாஜா
ஜனாப் S.M.A. அஹமது கபீர்
ஜனாப் மான் A. நெய்னா முஹம்மது
ஜனாப் A. முஹம்மது மொய்தீன்
ஜனாப் E. வாப்பு மரைக்காயர்

அதிரை பைத்துல்மால் தலைமை நிர்வாகிகள் :
ஜனாப் பேராசிரியர் S. பரகத்
ஜனாப் S. அப்துல் ஹமீத்
ஜனாப் O.K.M. சிபஹத்துல்லா

ஆகியோர் பங்களிப்புடன் பிலால் நகர் பகுதியில் குடிசையில் வசிக்கும் 50 பேருக்கு தலா ரூபாய் 500/- வீதமும், ஒரு நபருக்கு ரூபாய்  725/- ம் வழங்கப்பட்டன. அனைத்து பயனாளிகளும்  வருகை தந்து அவர்களுக்குரிய நிதியினை பெற்றுச்சென்றனர்.






நிகழ்ச்சியின் இடையே மூதாட்டி ஒருவர் 'தனக்கு நிதி உதவி வழங்கப்படவில்லை' என்ற வேண்டுகோளை வைத்தார் இதையடுத்து AAMF'ன் செயலாளரும், பேராசிரியருமாகிய சகோ. M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் தன்னுடைய பாக்கெட்லிருந்து ரூபாய் 500/- ஐ அம்மூதாட்டிக்கு வழங்கியது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் நெகிழவைத்தது. 

நிதி உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியையும், துஆவையும் AAMF  மற்றும் ABM சார்பாக இந்நிகழ்ச்சியில் தெரிவித்துக் கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சிக்குரிய அனைத்து பொறுப்புகளையும் சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்கள் எடுத்துக்கொண்டு சிறப்பாக செய்துருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Friday, October 26, 2012

துபாய் AAMF ஹஜ் பெருநாள் சந்திப்பு (புகைப்படங்கள்)



அஸ்ஸலாமு அலைக்கும், 
அல்லாஹ்வின் பேரருளால் 26-10-2012 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் அதிகாலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.

காலை 6:50 மணிக்கு பெருநாள் தொழுகை தொடங்கியது. சரியாக 7:30 மணிக்கு பராஹா சாலை வாசலருகே அதிரைவாசிகள் அணிஅணியாகக் கூடத்தொடங்கினர்.




 சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
வீடியோ கேமரா மற்றும் தொழில்நுட்ப புகைப்படக் கலைஞர்கள் குழுவினர் அதிரைவாசிகளை சுற்றிச் சுற்றி படம் பிடித்தது, மைதானத்திற்கு வந்திருந்த பிற ஊர்/நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.
 அதிரைவாசிகள் 350 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தைக் காணமுடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
















அதிரைவாசிகளுக்கு இத்தகைய சந்திப்புகளில் இருக்கும் ஆர்வத்தையே காட்டுகிறது.
இந்த இனிய சந்திப்பின்போது வந்திருந்த அதிரைவாசிகளுக்கு “AAMF” சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.

துபாய் - AAMF-இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு – 2012


காணொளி மற்றும் புகைப்படங்கள் விரைவில்...

Wednesday, October 24, 2012

AAMF-இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ்


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

அல்லாஹ்வின் பேரருளால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிரை அனைத்து மஹல்லா 
கூட்டமைப்புக்கு (AAMF) அடித்தளமாக கடந்த வருட துபாயில் நடந்த நோன்பு பெருநாள் சந்திப்பு அமைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இதன்தொடர்ச்சியாக, அதிரை, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.

உள்ளூரளவிலும் வெளிநாட்டிலும்அதிரைவாசிகளை ஒருங்கிணைக்கும் ஒரே அமைப்பு இல்லாத குறையை நமது  AAMF நிவர்த்தி செய்யும் நோக்கில்பல்வேறு நாடுகளிலுள்ளஅதிரைவாசிகளுடன் சந்திப்புகளை நடத்திஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும்வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும்பெருநாட்களன்று ஒன்றுகூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம்.

அவ்வகையில், இன்ஷா அல்லாஹ்,இவ்வருடமும் ஹஜ்  பெருநாளன்று துபாய் - டேரா ஈத்கா(Deira Eid Musallah) மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன்சென்றவருடத்தைப் போன்றே ஈத்காமைதானம் வாசலருகே அமீரகத்திலுள்ள நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடிமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரைநண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வரும்படி அன்புடன்அழைக்கின்றோம்.

குறிப்பு: இத்தகைய சந்திப்புகள் மூலமேவெளிநாட்டிலுள்ளஅதிரைவாசிகளுக்கிடையேபுரிந்துணர்வும் ஒற்றுமையும் பலம்பெறும் என்பதால் சிரமம் பாராதுகலந்துகொண்டு உங்கள் பங்களிப்பைஉறுதிசெய்து ஒத்துழைக்கவேண்டுகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும்எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Mr. Ismail  055-6077680                 கடற்கரை தெரு ஜீம்மா பள்ளி மஹல்லா
Mr. Ajmal  050-4963848     தாஜீல் இஸ்லாம் சங்கம் மேலத்தெரு மஹல்லா
Mr. Meeramohindeen 055-2320145   அல் மதரஸத்துன் நுருல் மஹம்மதியா சங்கம் கீழத் தெரு
Mr. Mohideen  050-5785239     மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நெசவுத் தெரு
Mr. Naina  050-7397093    முகைதீன் ஜீம்மா பள்ளி மஹல்லா தரகர் தெரு
Mr. Bashir 050-9228114                 மிஷ்கீன் சாஹிப் பள்ளி மஹல்லா
Mr. Abdul Jabbar   055-8219432            சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லா
  
அன்புடன்,
அனைத்து
 மஹல்லாஹ் கூட்டமைப்பு(AAMF)
ஈத்
 பெருநாள் சந்திப்பு குழு
UAE

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes