Saturday, March 24, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF ) – நான்காவது கூட்டம் !

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக நான்காவது கூட்டமாக இன்று ( 23-03-2012 )  அஸர் தொழுகைப்பின் நமதூர் கீழத்தெரு சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, M.M.S.சேக் நசுருதீன் தலைவர் – AAMF )அவர்கள் தலைமையில், பேராசிரியர்  M.A. முகமது அப்துல் காதர் ( செயலாளர் – AAMF ) அவர்கள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம், சகோ. அக்பர் ஹாஜியார், ஆசிரியர் சகோ. முகமது அலியார் ஆகியோர்களின் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.  
நிகழ்ச்சியின் நிரலாக...........................
சகோ. அதிரை அஹமது அவர்களால் கிராஅத் ஓதுப்பட்டது.
அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளி நல்லிணக்க குழு சார்பாக கடந்த 24/02/2012  அன்று நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ வளாகத்தில் S.M.A.  அக்பர் ஹாஜியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான வழக்குகள் கோர்ட்டில் இருப்பதால் அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளி மற்றும் அதிரை பேரூராட்சி ஆகிய இரு நிர்வாகத்தினரும் தங்களின் சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் தங்களால் போட்டப்பட்ட வழக்குகளை இரு தரப்பினரும் வாபஸ் பெறுவது என்றும் இதற்காக அல் அமீன் ஜாமிஆ பள்ளி நிர்வாகத்திற்கு இரண்டு மூன்று நாள்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு சுமூக முடிவை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது.
இத் தீர்மானத்திற்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் குறிப்பாக அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக தலைவர் M.M.S. சேக் நசுருதீன், செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், பொருளாளர் சகோ. பரகத் அலி மற்றும் அதிரை சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர்கள் கையொப்பமிட்டு உறுதிசெய்தனர்.

இதன் தொடர்ச்சியாக அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அகமது அன்சாரி அவர்களால் சில நாட்களுக்கு முன்பாக வழக்கு சம்பந்தமான “தன்னிலை விளக்கம்” ஓன்று நோட்டிசாக விநியோகிக்கப்பட்டது ( விரைவில் இவை பதிவுக்குள் கொண்டுவரப்படும் )


AAMF ன் சார்பாக இந்த நோட்டிசை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியாக இப்பிரச்சனையை AAMF கையிலெடுத்து சுமுகமாக தீர்த்து வைப்பது என்றும் இதற்காக தலா ஒருவர் வீதம் ஒன்பது முஹல்லாவிலிருந்தும் தேர்ந்தெடுங்கப்பட்டு கீழ்க்கண்ட குழு ஓன்று நியமணம் செய்யப்பட்டது.

அதிரை அஹமது
M. நிஜாமுதீன் ( சேக்கனா M. நிஜாம் )
P.M.K. தாஜுதீன்
மான் A. நெய்னா முகமது
K. யாஹியா கான்
J. சாகுல் ஹமீது
A. முகமது மொய்தீன்
E. வாப்பு மரைக்காயர்
T.A. அகமது அனஸ்

மேலும் கூடுதலாக AAMF ன் தலைவர் M.M.S. சேக் நசுருதீன், செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், சகோ. S.M.A.  அக்பர் ஹாஜியார், M. A. அஹமது ஹாஜா மற்றும் பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம் ஆகியோர்கள் இக்குழுவில் இடம்பெற்று சமரசம் ஏற்பட உறுதுணையாக இருப்பார்கள்.

இக்குழு விரைவில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை தொடங்கும்  இன்ஷா அல்லாஹ் ! )



சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றக் AAMF ’ன் இரண்டாவது கூட்டத்தில் கட்டுப்பாடற்ற முறையில் உயர்ந்து வருகிற கட்டிட பணியாளர்களின் கூலிகளை நிர்ணயம் செய்வது மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்வது போன்றவைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதியில் சகோ. K. சலீம் ( தாஜுல் இஸ்லாம் சங்கம் ) அவர்களின் தலைமையில் தலா ஒருவர் வீதம் ஒன்பது முஹல்லாவிலிருந்தும் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் பிரகாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு  AAMF ன் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சார்பாக அனைத்து முஹல்லா நிர்வாகிகளுக்கும் “நினைவூட்டல் கடிதம்” அனுப்பப்பட்டு, அதில் நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நமதூரில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்வது தொடர்பாக அறிவிப்பு செய்வது என ஆலோசிக்கப்பட்டது.
நமதூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக நமதூரைச் சேர்ந்த சகோதர்கள் மீது வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இவர்கள் படுகிற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்குகளிலிருந்து இவர்களை விடுவிக்க முயற்சி செய்வது தொடர்பாக ஏற்கனவே இவ்வழக்குகளை கையாள்வதற்காக சகோ. மான் A. நெய்னா முகமது ( துணை-பொருளாளர் – கீழத்தெரு முஹல்லா ) அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கிற்காக கீழத்தெரு முஹல்லா நிர்வாகத்தினர் சார்பாக ருபாய் 5000/- நிதி உதவி ஆசிரியர் சகோ. முகமது அலியார் அவர்களின் முன்னிலையில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை ஆனந்தா சில்க்ஸ் ரெடிமேட்ஸ் உரிமையாளர்கள் கொடுத்த மனுவை எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தக்வா பள்ளி மீன் மார்க்கெட் சம்பந்தமாக இரு தரப்பினர்கள் இடையே சமீபத்தில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வைக் கருத்தில் கொண்டு இருதரப்பினர்களிடேயே சமரசம் ஏற்படுத்தி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சுமுகமாக முடித்து தந்த சகோ. சேக்தாவுது ( கீழத்தெரு முஹல்லா ) மற்றும் அதிரை பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம் ஆகியோர்களுக்கு AAMF ன் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. 
அதிரை வர்த்தக சங்க செயலாளர் சகோ. N.A. முகமது யூசூப் அவர்களால் அரசு மருத்துவமனை இரவு நேர சேவை, அதிரை ரயில் நிலையத்தில் கணினி முன் பதிவு அலுவலகம் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ள, SDPI மற்றும் த.மு.மு.க. ஆகிய இரு சமுதாய அமைப்புகளுக்குள் சமிபத்தில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வை மறந்து அவர்களிடேய ஒற்றுமையை ஏற்படுத்துவது, பெரிய ஜும்மா பள்ளியில் “சுகாதார விழிப்புணர்வு அறிவிப்பு” போன்றவைகள் சம்பந்தமாக கொடுக்கப்பட்ட மனுவை எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  



நிகழ்ச்சியின் இறுதியாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட “கீழத்தெரு முஹல்லா“ நிர்வாகத்தினற்கு வாழ்த்துகள் பரிமாறப்பட்டு துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் வீதம் எனவும், இதன்படி அடுத்த கூட்டமாக “ கடற்கரைத்தெரு முஹல்லாவில் “ வருகிற 04-05-2012  அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

Wednesday, February 29, 2012

AAMF- யின் வாழ்த்து



Saturday, February 25, 2012

அதிரை அல் அமீன் பள்ளி : நீண்ட விவாதத்தில் சுமூக முடிவு !



அதிரை "அல் அமீன் ஜாமிஆ பள்ளி நல்லிணக்க குழு " சார்பாக இன்று அஸர் தொழுகைக்குப் பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகைதீன் ஜும்ஆ பள்ளி“வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஹாஜி S.M.A.  அக்பர் ஹாஜியார் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்கள் 


இக்கூட்டத்திற்குப் அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF )சார்பாக அதன் நிர்வாகிகள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா போன்ற அதிரையைச் சார்ந்த இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.

நிகழ்ச்சியின் நிரலாக....................
1.       அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான விவாதம் சுமார் 4 மணி நேரங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.


2.       அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமாக இதுவரையில் கூட்டப்பட்ட ஆறு கூட்டங்களும் தோல்வியில் முடிந்தது என்றும் இந்த ஏழாவது கூட்டம் கண்டிப்பாக வெற்றியாக அமையவேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3.       அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி அவர்களின் வழக்குகள் சம்மந்தமான விளக்கங்களுடன் கூடிய உரை சுமார் 1.30மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
4.       அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகம் சார்பாக வழக்கு சம்மந்தப்பட்ட குறிப்புகள் அடங்கிய நகல்கள் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளிடமும் கொடுக்கப்பட்டது.
5.       இப்பள்ளி அமைய மர்ஹூம் M.M.S. அப்துல் வஹாப் சாச்சா அவர்கள் எவ்வாறு உதவி புரிந்தார்கள் என்பதை அதிரை பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி , அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF )  தலைவர் M.M.S. சேக் நசுருதீன் போன்றோர்கள் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
     6.       அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) செயலாளர்  பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், அதிரை பேரூராட்சித் தலைவர் சகோ. அஸ்லாம் மற்றும் உறுப்பினர்கள் சகோ. இப்ராகிம், சகோ. செய்யது, சகோ.காதர், ஹாஜி S.M.A.  அக்பர் ஹாஜியார், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக பொருளாளர் சகோ. செய்யது, சகோ. சாகுல் ஹமீது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி சகோ.அன்வர் அலி ஆகியோர்கள் உரைகள் நிகழ்த்தி அல் அமீன் ஜாமிஆ பள்ளி கட்டவேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டப்பட்டது
7.       நிகழ்ச்சிகளை தரகர் தெரு “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
கூட்டத்தின் தீர்மானம் :
அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான வழக்குகள் கோர்ட்டில் இருப்பதால் அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளி மற்றும் அதிரை பேரூராட்சி ஆகியோர்கள் தங்களின் சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் தங்களால் போட்டப்பட்ட வழக்குகளை இரு தரப்பினரும் வாபஸ் பெறுவது என்றும் இதற்காக அல் அமீன் ஜாமிஆ பள்ளி நிர்வாகத்திற்கு இரண்டு மூன்று நாள்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு சுமூக முடிவை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. இத் தீர்மானத்திற்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் குறிப்பாக அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக தலைவர்M.M.S. சேக் நசுருதீன்,  செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், பொருளாளர் சகோ.ரகத் அலி மற்றும் அதிரை இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கையொப்பமிட்டு உறுதிசெய்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

Thanks : Adirai.in




Saturday, February 11, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF ) – மூன்றாவது கூட்டம் !



அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக மூன்றாவது கூட்டமாக இன்று (10-02-2012 )  அஸர் தொழுகைப்பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, M.M.S. சேக் நசுருதீன் தலைவர் – AAMF )அவர்கள் தலைமையில், பேராசிரியர்  M.A.முகமது அப்துல் காதர் ( செயலாளர் – AAMF ) அவர்கள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம் அவர்கள் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.
AAMF ’ன் முதல் கூட்டமாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் AAMF ன் வளர்ச்சிகள் மற்றும் ஹஜ்ரத் பிலால் நகர் மற்றும் ஆதம் நகர் ( M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய )ஆகிய இரு முஹல்லாக்களையும் இணைத்து ஒன்பது முஹல்லாவாக செயல்படுவது என்பது தீர்மானம் செய்யப்பட்டது.
AAMF ’ன் இரண்டாவது கூட்டமாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் கட்டுப்பாடற்ற முறையில் உயர்ந்து வருகிற கட்டிட பணியாளர்களின் கூலிகளை நிர்ணயம் செய்வது மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்வது போன்றவைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதியில் சகோ. K. சலீம் ( தாஜுல் இஸ்லாம் சங்கம் ) அவர்களின் தலைமையில் தலா ஒருவர் வீதம் ஒன்பது முஹல்லாவிலிருந்தும் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அவசரக்கூட்டமாக நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின்  ( AAMF சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமிப்பது என்று மரைக்காயர் பள்ளியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் முன்னிலையில், M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்றக் கூட்டத்தில் அனைத்து முஹல்லாவைச் சேர்ந்த அதன் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிரலாக.......................
·         அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF), ஊர் ஒற்றுமை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒழுங்கு முறையை பின்பற்றுவது போன்ற நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டப்பட்டது.
·         அதிரையில் உள்ள இஸ்லாமிய பொது அமைப்புகளுக்கு குறிப்பாக  அதிரை பைத்துல்மால் மற்றும் எந்த ஒரு அமைப்பிற்கும் போட்டியாகவோ அல்லது அவர்களின் செயல் திட்டங்களில் குறுக்கீடுகள் செய்வதையோ விரும்ப மாட்டோம். மேலும் எங்களின் ஒத்துழைப்புகள்  AAMF ’ன் பங்களிப்பாக அனைத்து அமைப்புகளுக்கும் இருக்கும் ( இன்ஷா அல்லாஹ் ! ) என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
·         நமதூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக நமதூரைச் சேர்ந்த சகோதர்கள் மீது வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இவர்கள் படுகிற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்குகளிலிருந்து இவர்களை விடுவிக்க முயற்சி செய்வது தொடர்பாக பேசப்பட்டது. மேலும் இவ்வழக்குகளை கையாள்வதற்கு சகோ. மான் A. நெய்னா முகமது ( துணை-பொருளாளர் – கீழத்தெரு முஹல்லா ) அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிகபட்டது குறிப்பிடத்தக்கது.
·         பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம் அவர்களின் சுகாதார விழிப்புணர்வு அறிவிப்பு சம்பந்தமாக கொடுக்கப்பட்ட மனுவை எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
·         அனைத்து முஹல்லவை சார்ந்த பள்ளிகளிலும் “மக்தப்” களை ஏற்படுத்தி இதன் மூலம் நமது சமுதாயம் சார்ந்த சிறுவர், சிறுமிகளுக்கு மார்க்க கல்வியை குறிப்பாக குரான் ஓதும் பயிற்சிகள், ஹதீஸ்களின் விளக்கங்கள், சூராக்கள் மனனம், இஸ்லாமிய பொது அறிவு கேள்வி-வினாக்கள் போன்றவைகள் நடத்தப்பட வேண்டியது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
·         நமதூரில் கந்து வட்டியின் கொடுமையில் சிக்கி தவிக்கும் அப்பாவி சகோதர, சகோதரிகளை இனங்கண்டு அக்கொடுமையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது தொடர்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
·         அமீரக கிளையின் சார்பாக சகோ. V.T. அஜ்மல்கான் ( செயலாளர் - AAMF அமீரக கிளை )அவர்கள் மூலம் கொடுத்தனுப்பிய வேண்டுகோள்கள் வாசிக்கப்பட்டது. குறிப்பாக  'உலமாக்கள் குழு' என்ற ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அமீரக அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக வைக்கப்பட்ட வேண்டுகோளில்......

உலமாக்கள் குழு ஏன் வேண்டும் ?
பொதுவாக ஒரு சமூகத்தில் வாழ்கிற மக்களுக்குநன்மையை ஏவுவதற்கும்தீமையைத் தடுப்பதற்கும்ஒரு குழு இருக்க அல்லாஹ்வும்,முஹம்மது(ஸல்) அவர்களும் நமக்கு பின்வருமாறு வலியுருத்துகிறார்கள்:

நம்பிக்கை கொண்ட ஆண்களும்பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்: ஞானமிக்கவன். (அத்தவ்பா 9:71)
நன்மையை ஏவிதீமையைத் தடுத்துநல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (ஆலு இம்ரான் 3:104)

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால்(சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.     
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)நூல்: முஸ்லிம் 78
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும்கருணை புரிவதிலும் பரிவு காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களின் நிலையானதுஓர் உடலின் நிலையைப் போன்றதாகும். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால்அதனுடன் மற்ற உறுப்புகளும் (சோர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது. அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)நூல்: முஸ்லிம் 5044, புகாரி 6011

இன்று நமது சமுதாயத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை பெரும்பாலோர் சரியான மார்க்க ஞானத்திற்கும்முறையாக வழிகாட்டலுக்கும் அதிகம் தேவையுள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே மேற்கூறப்பட்ட இறை வசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கிணங்க சமுதாயச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட ஒரு குழு நமது சமூகத்தில் இருப்பது மார்க்க கடமையாகும். எனவேஅல்குர்ஆன் மற்றும் நபிவிழியின் அடிப்படையில் அந்த உயர்ந்த பணியை நிறைவேற்றி இறை திருப்தியை அடைய வேண்டும் என்ற தூய எண்ணத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பினர் நமதூருக்கு பொதுவாக 'உலமாக்கள் குழு' ஒன்றை துவங்க வேண்டியது அவசியம் என அமீரகம் AAMF-னர் கருதுகிறோம்.

'இவ்வுலமாக்கள் குழு' சார்பாக நமதூரில் அவசியம் செய்ய வேண்டிய பணிகளில் சில வருமாறு:

1. நமதூரில் நடைபெற்று வருகிற மார்க்க விரோத சீர்கேடுகளையும்அனாச்சாரங்களையும் களைவதற்கு தொடர்ச்சியான மார்க்க உபதேச வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இன்று நமதூரில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் வாரந்தேரும் வியாழக் கிழமைகளில் இஷா  தொழுகைக்கு பிறகு அந்தந்த காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மார்க்க சொற்பொழிவுகள் நிகழ்த்த ஏற்பாடு செய்ய வேண்டும். இச்சொற்பொழிவு நிகழ்ச்சிகள் குறித்து ஒவ்வொரு பள்ளியிலும் பொது அறிவிப்பு செய்துஅம்முஹல்லாவில் உள்ள ஆண்களும்பெண்களும் பங்கேற்கும் வகையில் வசதிகள் செய்ய வேண்டும். 
இன்ஷாஅல்லாஹ் இதன் மூலம் நமது சமூகத்தில் நடைபெற்று வரும் சீர்கேடுகளையும்அனாச்சாரங்களையும் (வரதட்சனைவட்டி,ஒழுக்கக்கேடான காரியங்கள்) களைவதுடன்நமதூர் மக்களுக்கு நல்லமுறையில் மார்க்க அறிவும்வழிகாட்டல்களும் கிடைக்க செய்ய முடியும் என அமீரக AAMF நம்புகிறோம்.

2. நமதூர் அனைத்து முஹல்லாவிலுள்ள வளரும் சிறுவர்களுக்கு குர்ஆன் ஓதுவதற்கும்மார்க்க அறிவை பயிற்றுவிப்பதற்கும் 'உலமாக்கள் குழு'சார்பாக ஒரு சிறந்த பாடத் திட்டத்தை உருவாக்க வேண்டும். அப்பாடதிட்டத்தின்படி நமதூரில் இயங்குகிற ஆண்கள் மற்றும் பெண்கள் மதரஸாவில் படித்து வருகிற மாணவர்களைக் கொண்டு அனைத்து முஹல்லாவிலும் உள்ள பள்ளிவாசல்களில் காலையிலும்மாலையிலும் ஆரம்ப குர்ஆன் மக்தப் வகுப்புகள் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு தனித்தனியாக நடத்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஏற்படுத்த தீவிரமாக செயல்பட வேண்டும் என அமீரக AAMF கேட்டுக் கொள்கிறது.

3. நமதூர் அனைத்து முஹல்லாவிலுள்ள பருவ வயதை அடைந்த ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களிலேயே அல்லது ஒவ்வொரு முஹல்லாவிலோ கண்டிப்பாக - தீனியாத் வகுப்புகள் நடத்த வேண்டும். அப்படி நடத்தப்படுகிற தீன்யாத் வகுப்புகளில் தாய்-தந்தைகளுக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய மார்க்கம் கடமைகள்கணவன் - மனைவிகளின் பொறுப்புகள் குறித்த மார்க்க கடமைகள்குழந்தைகள் வளர்ப்பு முறைகள்முதுயோர்களை பேணி நடத்துவது போன்ற காரியங்களை கற்றுக் கொடுக்கும் வகையில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த வேண்டும் என அமீரக AAMF கேட்டுக் கொள்கிறது. ஏனெனில் எதிர்காலத்தில் நமது சமூகத்தில் தாய்-தந்தையர்களை கவனிக்காத பிள்ளைகள்,கணவன்-மனைவி சச்சரவுகள் போன்ற எண்னெற்ற கேடுகள் இல்லாத சமுதாய மலர பயனளிக்கும் என் அமீரக AAMF நம்புகிறது.

4. நமதூரில் உள்ள அனைத்து முஹல்லா சங்கங்களுக்கும் வருகிற தலாக்சொத்து பாகப்பிரிவு போன்ற விவகாரங்களுக்கு 'உலமாக்கள் குழு' மூலம்மார்க்க வழிகாட்டு முறைகளை பெற்று அவ்விவகாரங்களை ஒவ்வொரு முஹல்லா சங்க நிர்வாகமும் அனுகி தீர்த்துக் கொள்ளும் முறை ஏற்படுத்த வேண்டும் என அமீரக AAMF கேட்டுக் கொள்கிறது.

5. நமதூரில் எத்துனை பள்ளிவாசல்கள் உள்ளன. அந்தந்த பள்ளிகளின் நிர்வாகம் எவ்வாறு நடத்தப்பட்டு வருகிறது. எந்தெந்த பள்ளி நிர்வாகம் நலிந்த நிலையில் உள்ளன போன்ற விவரங்களை 'உலமாக்கள் குழு' மூலம் நமது தாயக AAMF தகவல்களை பெற வேண்டும் என வேண்டுகிறோம். அத்துடன் நமதூரில் ஜும்ஆக்கள் நடைபெற்று வருகிற அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வாரமும் நிகழ்த்தப்படுகிற குத்பாக்கள் ஒரே செய்தியை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக அமைத்துக் கொள்ள நமது 'உலமாக்கள் குழு' ஏற்பாடு செய்ய வேண்டும் என அமீரக  AAMF விரும்புகிறது.
 
இன்ஷாஅல்லாஹ் 'உலமாக்கள் குழு' தேவைக்கு ஏற்ப இன்னும் பல பணிகளை காலோட்டத்தில் சேர்த்து கொள்ளலாம்.

இவ்வேண்டுகோளை பரிசீலனைக்கு எடுத்து விவாதங்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் இறுதியாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட தரகர் தெரு “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ நிர்வாகத்திற்கு வாழ்த்துகள் பரிமாறப்பட்டு துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் வீதம் என முடிவு செய்யப்பட்டு அடுத்த கூட்டமாக “ கீழத்தெரு முஹல்லாவில் “ வருகிற 23-03-2012  அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.








Tuesday, February 7, 2012

(AAMF) யின் சார்பாக லண்டன் இந்திய தூதரக அதிகாரிக்கு அகல ரயில் பாதை சமந்தமாக மனு ஒன்று கொடுத்துள்ளனர்

அஸ்ஸலாமு அலைக்கும்

லண்டன் (AAMF) யின் சார்பாக லண்டன் இந்திய தூதரக அதிகாரியை நமதூர் அகல ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். அது சமயம் லண்டன் (AAMF) ஒருங்கிணைப்பாளர் S.A. இம்தியாஸ் அஹமது லண்டன் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணை தலைவர் டாக்டர். கபீர் காக்கா அவர்களும் இந்திய தூதரக அதிகாரிக்கு பரிசாக அரபியிலும்(translate) ஆங்கிலத்தில் உள்ள குர்ஆனை வழங்கியுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு லண்டன் வாழ் (AAMF) யின் சகோதரர்கள். அவருக்கு கொடுத்த கடிதத்தையும் இணைத்துள்ளோம்.








Monday, February 6, 2012

AAMF -இன் அறிவிப்பும் வேண்டுகோளும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) !

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த 14-01-2012 அன்று நடைப்பெற்ற அவசரக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி

நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமித்த செய்தி அனைவரும் அறிந்ததே.


இவர்களின் சம்பளத்தை காலம் தாழ்த்தாமல் செலுத்துவதற்கு ஏதுவாக லண்டன் வாழ் சம்சுல் இஸ்லாம் சங்கதிற்குட்பட்ட சகோதரர் லண்டனில் இருக்கும் காலம் வரை, ஒவ்வொரு மாதமும் ரூ.2,௦௦௦/- தருவதாக போருப்பேற்றுகொன்டுள்ளார். (Jazakallah Khair ).

இதுபோல், வெளிநாடு வாழ் அதிரை சகோதர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களால் இயன்ற நன்கொடையை தந்து உதவி இந்த நல்ல காரியத்தில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு சகோ.A .தமீம் -தலைவர், அமீரக கிளை. Mobile No : 00971 -50 -7480023 ,
Email : adiraiallmuhallah @gmail .com

இப்படிக்கு
AAMF நிர்வாகம்
அமீரக கிளை.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes