Tuesday, December 13, 2011

தீ விபத்தில் சேதமடைந்த குடும்பகளுக்கு அதிரை லண்டன் வாழ் மக்களின் உதவி...

அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரையில் கடந்த 10/11/2011 அன்று மதியம் 1:00 மணி அளவில் கீழத்தெரு, முஹல்லாவுக்கு உட்பட்ட புதுக்குடி நெசவு தெருவில் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டிலுள்ள அனைத்து உடைமைகளும் தீக்கிரையானது. வீடு மற்றும் உடைமைகளை இழந்து வாடும் நம் சகோதர குடும்பங்களுக்கு லண்டன் வாழ் அதிரை மக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிரை அனைத்து முஹல்லா கமிட்டி (AAMF) சார்பாக பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லம் முன்னிலையில் ரூ.30,000 தொகையை கீழத்தெரு முஹல்லா கமிட்டி பொறுப்பாளர்களிடம் 11.12.2011 அன்று ஒப்படைக்கப்பட்டது.

1 comments:

navabar said...

londen val adirai makkalukku manamarntha nandrikal

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes