Friday, November 11, 2011

AAMF - துபை கிளை -நிர்வாகிகள் காணொளி பேட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரையில் வியாழன் மாலை அதாவது 10-11-2011 அன்று அனைத்து அதிரை முஹல்லா நிர்வாகிகள் தேர்வு மிகச் சிறப்புடன் நடந்தது அல்ஹம்துலில்லாஹ். கடந்த நோன்புப் பெருநாள் தொழுக்குப்பின்னர் துபாய் ஈத்கா மைதானத்தில் நிகழ்ந்த சந்திப்பின் விதை இன்று அதிரையில் செடியா ஊன்றப்பட்டிருக்கிறது.

இந்த கூட்டு முயற்சியின் வெற்றியை எளிதாக்கி வைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் நிலைக்கட்டுமாக !

அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் துபாய் கிளையின் செயலாளர் V.T.அஜ்மல் அவர்களும், தாஜுல் இஸ்லாம் சங்கம், துபாய் கிளையின் தலைவர் B.ஜமாலுதீன் அவர்களும் அதிரைநிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியின் காணொளியினை இங்கே பதிகிறோம்.

ஒருங்கினைப்பு என்பதன் அர்த்தம் மெய்பிப்போம், அதனை நிலைத்திட நிமிர்ந்த நடை போடுவோம் இன்ஷா அல்லாஹ் !
 
 

Thursday, November 10, 2011

அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அதிரையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

அதிரையில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் கூட்டம் ஜாவியாவில் இன்று கூடியது. ஒவ்வொரு சங்கத்திலிருந்து முன்று நபர்கள் தலா ஏழு முஹல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்




தலைவர் : தாஜூல் இஸ்லாம் சங்கம் (பெயர் பின்னர் அறிவிக்கப்படும்)
செயலாளர் : பேராசிரியர் அப்துல் காதர் (சம்சுல் இஸ்லாம் சங்கம்)
துணைத் தலைவர் : சாகுல் ஹமீது (கடற்கரை தெரு சங்கம்)
துணைச் செயலாளர் : முகம்மது முகைதின் (நெசவுத் தெரு சங்கம் )
துணைத் தலைவர் : (மிஸ்கின் பள்ளி முஹல்லா)
பொருளாளர் : பாரக்கத் அலி (தரகர் தெரு சங்கம்)
துணைப் பொருளாளர் : கிழத்தெரு சங்கம் (பெயர் பின்னர் அறிவிக்கப்படும்)

Wednesday, November 9, 2011

Tuesday, November 8, 2011

அதிரையில் அணைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் முதல் கூட்டம்!

அணைத்து முஹல்லாஹ் கூட்டமைபின் முதல் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று மாலை 4:30 மணியளவில் நமதூர் ஜாவியாவில் நடைப்பெற்றது. அதிரையில் உள்ள ஏழு சங்க நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக இக்கூட்டத்தை நடத்துவதற்காக துபையில் இருந்து அணைத்து முஹல்லாஹ் கூட்டமைபின் நிர்வாகிகள் வந்து ஏற்பாடு செய்தனர்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த கட்ட நடவடிக்கையாக நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு வரும் வியாழக்கிழமை இந்த கூட்டம் நடைபெறும்.


இதன் முழு காணொளி விரைவில் இன்ஷா அல்லாஹ்.!












Sunday, November 6, 2011

AAMF துபை ஹஜ் பெருநாள் சந்திப்பு







அஸ்ஸலாமு அலைக்கும். இன்று (06-11-2011)  ஞாயிற்றுக்கிழமை துபாய் டேரா ஈத்கா மைதானத்தில் அதிரைவாசிகள் 300 க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர். அல்ஹம்துலில்லாஹ்.

காலை 6:50 மணிக்கு ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்து பராஹா சாலை வாசல் அருகே கூடிய அதிரைவாசிகளை அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை.இன்,அதிரை அனைத்து முஹல்லா,அதிரை ஃபேக்ட் மற்றும் அதிரை நிருபர் இணைய தளங்களின் சார்பில் புகைப்படம் மற்றுக் காணொளிகள் எடுக்கப்பட்டது.

அதிரை அனைத்து முஹல்லா சார்பில் ஹஜ் பெருநாள் வாழ்த்து அட்டையும் சாக்லெட்டும் இணைக்கப்பட்ட வரவேற்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது. சுமார் 350 எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டதாக அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அனைத்து முஹல்லா ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மேலத்தெரு,கீழத்தெரு, நெசவுத்தெரு,தரகர் தெரு,கடற்கரை தெரு,மிஸ்கீன் பள்ளி மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க துபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் சகோ.சிராஜுதீன் மற்றும் அதிரை நிருபர் சார்பில் சகோ.தாஜுதீன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்தனர். இதன் காணொளி மற்றும் புகைப்படங்கள் அதிரையின் பிரபல வலைத்தளங்கள் அனைத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.




 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes