கடந்த ( 08-06-2012 ) அன்று ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டத்தில் ஹஜ்ரத் பிலால் நகர், M.S.M. நகர், K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகளை அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சியுடன் இணைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இன்று மாவட்ட ஆட்சியரை AAMF’ன் சார்பாக சந்தித்து ஒப்படைக்கப்பட்டது.
இக்கோரிக்கை மனு மீது ஆய்வுக்கு உட்படுத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரியை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
கோரிக்கை மனுவின் விவரம் :
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், 149 ஏரிபுறக்கரை கிராம நிர்வாகத்திற்கு உள்ளடக்கிய ஹஜரத் பிலால் நகர், M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய ஆதம் நகர், மேலத்தெரு சானா வயல் போன்ற பகுதிகள் ஆகும்.
இப்பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப...