Friday, October 26, 2012

துபாய் AAMF ஹஜ் பெருநாள் சந்திப்பு (புகைப்படங்கள்)



அஸ்ஸலாமு அலைக்கும், 
அல்லாஹ்வின் பேரருளால் 26-10-2012 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் அதிகாலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.

காலை 6:50 மணிக்கு பெருநாள் தொழுகை தொடங்கியது. சரியாக 7:30 மணிக்கு பராஹா சாலை வாசலருகே அதிரைவாசிகள் அணிஅணியாகக் கூடத்தொடங்கினர்.




 சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
வீடியோ கேமரா மற்றும் தொழில்நுட்ப புகைப்படக் கலைஞர்கள் குழுவினர் அதிரைவாசிகளை சுற்றிச் சுற்றி படம் பிடித்தது, மைதானத்திற்கு வந்திருந்த பிற ஊர்/நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.
 அதிரைவாசிகள் 350 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தைக் காணமுடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
















அதிரைவாசிகளுக்கு இத்தகைய சந்திப்புகளில் இருக்கும் ஆர்வத்தையே காட்டுகிறது.
இந்த இனிய சந்திப்பின்போது வந்திருந்த அதிரைவாசிகளுக்கு “AAMF” சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.

துபாய் - AAMF-இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு – 2012


காணொளி மற்றும் புகைப்படங்கள் விரைவில்...

Wednesday, October 24, 2012

AAMF-இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ்


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

அல்லாஹ்வின் பேரருளால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிரை அனைத்து மஹல்லா 
கூட்டமைப்புக்கு (AAMF) அடித்தளமாக கடந்த வருட துபாயில் நடந்த நோன்பு பெருநாள் சந்திப்பு அமைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இதன்தொடர்ச்சியாக, அதிரை, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.

உள்ளூரளவிலும் வெளிநாட்டிலும்அதிரைவாசிகளை ஒருங்கிணைக்கும் ஒரே அமைப்பு இல்லாத குறையை நமது  AAMF நிவர்த்தி செய்யும் நோக்கில்பல்வேறு நாடுகளிலுள்ளஅதிரைவாசிகளுடன் சந்திப்புகளை நடத்திஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும்வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும்பெருநாட்களன்று ஒன்றுகூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம்.

அவ்வகையில், இன்ஷா அல்லாஹ்,இவ்வருடமும் ஹஜ்  பெருநாளன்று துபாய் - டேரா ஈத்கா(Deira Eid Musallah) மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன்சென்றவருடத்தைப் போன்றே ஈத்காமைதானம் வாசலருகே அமீரகத்திலுள்ள நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடிமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரைநண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வரும்படி அன்புடன்அழைக்கின்றோம்.

குறிப்பு: இத்தகைய சந்திப்புகள் மூலமேவெளிநாட்டிலுள்ளஅதிரைவாசிகளுக்கிடையேபுரிந்துணர்வும் ஒற்றுமையும் பலம்பெறும் என்பதால் சிரமம் பாராதுகலந்துகொண்டு உங்கள் பங்களிப்பைஉறுதிசெய்து ஒத்துழைக்கவேண்டுகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும்எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Mr. Ismail  055-6077680                 கடற்கரை தெரு ஜீம்மா பள்ளி மஹல்லா
Mr. Ajmal  050-4963848     தாஜீல் இஸ்லாம் சங்கம் மேலத்தெரு மஹல்லா
Mr. Meeramohindeen 055-2320145   அல் மதரஸத்துன் நுருல் மஹம்மதியா சங்கம் கீழத் தெரு
Mr. Mohideen  050-5785239     மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நெசவுத் தெரு
Mr. Naina  050-7397093    முகைதீன் ஜீம்மா பள்ளி மஹல்லா தரகர் தெரு
Mr. Bashir 050-9228114                 மிஷ்கீன் சாஹிப் பள்ளி மஹல்லா
Mr. Abdul Jabbar   055-8219432            சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லா
  
அன்புடன்,
அனைத்து
 மஹல்லாஹ் கூட்டமைப்பு(AAMF)
ஈத்
 பெருநாள் சந்திப்பு குழு
UAE

Saturday, October 20, 2012

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் எட்டாவதுக் கூட்டம் !


இன்று ( 19-10-2012 ) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் மஹல்லாவில் உள்ள ரஹ்மான் மஸ்ஜிதில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் எட்டாவதுக் கூட்டத்திற்கு  AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அக்பர் ஹாஜியார், மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி, அதிரை பைத்துல்மால் செயலாளர் சகோ. அப்துல் ஹமீத், நாவலர் நூர் முஹம்மது, வழக்கறிஞர் அப்துல் முனாப் ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.



நிகழ்ச்சியின் துளிகள்...

1. கிராஅத் : சேக்தாவுது ஆலிம் அவர்கள்

2. வரவேற்புரை : ஹாஜி ஜனாப்  M. M.S. சேக் நசுருதீன் அவர்கள்.

3. முஹம்மது யூசுப் ஆலிம் அவர்கள் தனது சிறப்புரையில் 'கூட்டத்தின் ஒழுங்கீனம்பற்றி' குறிப்பிட்டு பேசினார்கள்.

4. சகோ. வாப்பு மரைக்காயர் அவர்கள் தனது அறிமுக உரையில் 'M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் உருவாகிய வரலாறு பற்றி குறிப்பிட்டு பேசினார்கள்.

5. நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக [ மவுத் ] குழி வெட்டுதலில் ஈடுபடும் சகோதரர்களுக்கு காலதாமதமில்லாமல் அவர்களுடைய ஊதியம் அவர்களுக்கு சென்றடையும் வகையில் கையிருப்பு தொகை இருப்பதின் அவசியம் எடுத்துப்பேசப்பட்டன. இதற்குரிய உதவிகளுக்கு  முயற்சிக்கும்படி அனைத்து மஹல்லா நிர்வாகிகளிடமும் தனது வேண்டுகோளாக வைத்தார் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள். 

6. முதன் முதலாக AAMF'ன் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதம் நகர் மஹல்லாவாசியான மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களை வரவேற்று அனைவரிடத்திலும் அறிமுகம் செய்துவைத்து அவர்களின் சமூகம் சார்ந்த எழுத்துப்பணிகள் பற்றி குறிப்பிட்டு பேசினார் பேராசிரியர்  M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள்.

7. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, கல்விக்கடன் போன்றவற்றை பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குவதற்காக குழு ஓன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், சேக்கனா M.  நிஜாம் மற்றும் மான் A. நெய்னா முஹம்மது ஆகியோரை நியமணம் செய்யப்பட்டுள்ளது.

8. AAMF'ன் பைலா அடுத்தக் கூட்டத்தில் இறுதிவடிவம் செய்யப்பட வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டன.

9. அனைத்து மஹல்லாவின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு திருமண பதிவேடு புத்தகத்தை அந்ததந்த மஹல்லாவிற்குள் மட்டும் பயன்படுத்திக்கொள்ள அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டன.

10. முஹல்லா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'மஹல்லா' என்ற சரியான வார்த்தையை அனைத்து தகவல் தொடர்புகளிலும் பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டன.


11. இதய சிகிச்சைக்காக சகோ. சாகுல் ஹமீத் அவர்களுக்கு சகோ. இம்தியாஸ் மூலம் பெறப்பட்ட ரூபாய் 17,300/- AAMF'ன் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டு, அவர் விரைவில் பூரண குணமடைந்து பணிக்கு திரும்ப இறைவனிடம் 'துஆ'ச்செய்ய அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளப்பட்டன.

12. அரசின் சார்பாக ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக நம்மைப்பற்றிய உடற்கூறு ரீதி ஆதாரங்கள் [ புகைப்படம், அங்க அடையாளங்கள் போன்றவை ] எடுக்கும் பணிகள் நமதூரில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதற்குரிய ஆவணங்களை அலுவலரிடம் சமர்பித்து தவறாது எடுத்துக்கொள்ளும்படி அனைவரிடமும் வேண்டுகோள் விடப்பட்டன.

13. AAMF'ன் எட்டாவது கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சகோதரர்கள் இப்ராகிம் அன்சாரி, அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீத், நாவலர் நூர் முஹம்மது ஆகியோர் முதல் முறையாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

14. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.





குறிப்பு : 
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு [ AAMF ] சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது மஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "புதுத்தெரு மஹல்லாவில்" நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ] இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

Friday, October 12, 2012

அமீரக AAMF-ன் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

இடம்: தாஹா நெசவு தெரு முஹல்லா, சார்ஜா
 தேதி: 11-10-2012

அமீரக AAMF-யின் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம் தலைவர்  A. தமீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வமர்வில் ஆலோசித்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள்...

1. AAMF - யின் 2013 ஆண்டு காலண்டர் வினியோகிப்பது சம்மந்தமாக ஸ்பான்ஸ்சர்களை அணுகி காலண்டர்காண பொருளாதாரத்தை ஈட்டுவது, அது முடியாத பட்சத்தில் அனைத்து முஹல்லாக்களின் பங்களிப்புடன் தொகையை வசூழித்து அச்சிட்டு வினியோகிப்பது.
2. தரகர் தெரு முஹல்லா ஜாமாத்தை ஒருகிணைப்பது.
3. அதிரையில் AAMF சட்டப்புர்வமாக பதிவு (REGISTER) செய்வதை துரிதப்படுத்துவது.




இப்படிக்கு,
AAMF-UAE


Sunday, September 9, 2012

அதிரை காவல்துறையின் அழைப்பை ஏற்று அனைத்து முஹல்லா நிர்வாகிகள் பங்கேற்பு !


இன்று இரவு 8 மணியளவில் நமதூர் காவல்துறை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.

1. அதிரை காவல்துறை ஆய்வாளர் அவர்களின் அழைப்பை ஏற்று நமதூர் அனைத்து முஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2. வருகின்ற 22-09-2012 அன்று நடைபெற உள்ள ‘விநாயகர் மூர்த்தி’ ஊர்வலத்திற்கு எவ்வித அசாம்பவிதங்ளும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அனைத்து முஹல்லா நிர்வாகிகளும் தங்களுடைய ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டன.


 




Saturday, September 8, 2012

அமீரக AAMF-ன் செப்டம்பா் மாத செயற்குழு கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும்,

அமீரக AAMF-ன் செப்டம்பா் மாத செயற்குழு கூட்டம் தலைவா் A. தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

இடம் : மீரா மைதீன் ரூம்  (கீழத் தெரு)


தேதி: 06.09.2012

இவ்வமா்வில் ஆலோசித்து எடுக்கப்பட்ட தீா்மானங்கள் :

1) கடந்த ரமளான் மாதத்தில் அமீரக AAMF-ன் சார்பாக வாழைமரத்து பள்ளிவாசலில் (துபை) நோன்பு திறப்பு நிகழ்ச்சியை சிறப்பாக செய்து முடிக்க உதவிய சகோதா்கள்; மக்தும் நைணா, தஸ்தகீா் மற்றும் ஷேக்தாவுத் ஆகியோருக்கு அமீராக AAMF-ன் சார்பாக நன்றியை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

2)  தாயக AAMF-ன் சார்பாக கடந்த 31.08.2012 அன்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் ஊரில் நடைபெறும் கட்டிட கட்டுமானம் பணிகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்டு முடிவெடுத்தை அமீராக AAMF-ன் வரவேற்கிறது. இதனை போர்கால அடிப்படையில் நடைமுறைக்கு கொண்டு வர துரிதமாக செயல்பட UAE – AAMF கேட்டுக் கொள்கிறது.

3) மறியாதைக்குறிய ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது,    இது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட நிகழ்வாக இருப்பதால், அந்த முகல்லாஹ்வின் முடிவுக்கு விட்டுவிடுவது என தீர்மானிக்கப்பட்டது.




Wednesday, September 5, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சிறப்புக்கூட்டம் !


AAMF’ன் அடுத்த மாதாந்திரக் கூட்டம் நமதூர் M.S.M. நகரில் நடைபெறுவதாக அறிவித்ததையடுத்து அதில் சிறிது கால இடைவெளி ஏற்பட்டது. இதைக்கருத்தில் கொண்டு கடந்த 31-08-2012 அன்று நமதூர் கீழத்தெரு சங்கத்தில் சிறப்புக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

அதன்படி கூட்டப்பட்ட கூட்டத்திற்கு AAMF’ன் நிர்வாகிகள் M. M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M. அப்துல் காதர், K.M. பரகத் அலி ஆகியோர் தலைமையிலும், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட AAMF’ன் ஒருங்கிணைப்பாளரும், சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவருமாகிய ஹாஜி ஜனாப்  M.S. ஷிஹாப்தீன் மற்றும் கீழத்தெரு முஹல்லாவின் அமீரக தலைவர் ஜனாப். அப்துல் ஜலீல் ஆகியோர் முன்னிலையிலும் இனிதே துவங்கியது.

நிகழ்ச்சியின் நிரலாக....

1. கிராஅத் : ஜனாப் S.M.A. அஹமது கபீர் அவர்கள்.

2. வரவேற்புரை : ஹாஜி ஜனாப்  M. M.S. சேக் நசுருதீன் அவர்கள்.

3. நமதூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக நமதூரைச் சேர்ந்த சகோதர்கள் மீது வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து இவர்கள் படுகிற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்குகளை கையாள்வதற்காக ஜனாப். மான் A. நெய்னா முகமது ( துணை-பொருளாளர் – கீழத்தெரு முஹல்லா ) அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிக்கபட்டன. இவ்வழக்கின் தற்போதைய நிலைப் பற்றி அக்குழுவின் தலைவர் அவர்களால் விளக்கம் தரப்பட்டது.

4. சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற AAMF’ன் இரண்டாவது கூட்டத்தில் கட்டுப்பாடற்ற முறையில் உயர்ந்து வருகிற கட்டிட பணியாளர்களின் கூலிகளை நிர்ணயம் செய்வது மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்வது போன்றவை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியதை நாம் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக ஒரு சில இடங்களில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட ‘வெள்ளிக்கிழமைகளில் பணிகள் தொடர்கின்றன’ என்ற செய்தியை அடுத்து இதற்காக கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு AAMF’ன் சார்பாக நினைவூட்டல் கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. AAMF’ன் சார்பாக நமதூர் காவல்துறை கண்காணிப்பாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

6. AAMF’ன் அதிகாரபூர்வ தகவல் தொடர்பாளராக சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்கள் தொடர்வார் என்றும், AAMF’ன் தற்காலிக அலுவலகமாக கீழத்தெரு சங்கத்தின் முகவரியைப் பயன்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

7. நமதூரில் ஒவ்வொரு வருடமும் நடைபெறக்கூடிய பெருநாள் தொழுகையை அனைத்து முஹல்லாவைச் சார்ந்த சகோதரர்களின் பங்களிப்புடனும், தொலைத்தூரங்களிலிருந்து வரும் நமது சகோதரர்களுக்காக வாகன வசதியையும் ஏற்பாடு செய்து கொடுத்து நமதூர் ‘பெரிய ஜூம்ஆ’ பள்ளியில் பெருநாள் தொழுகையை நடத்துவதற்கு AAMF’ன் ஒருங்கிணைப்பாளரும், சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவருமாகிய ஹாஜி ஜனாப்  M.S. ஷிஹாப்தீன் அவர்கள் தனது கோரிக்கையாக இக்கூட்டத்தில் வைத்தார்கள்.

8. கடந்த 23-03-2012 அன்று கீழத்தெரு சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நான்காவது கூட்டத்தில் அதிரை வர்த்தக சங்க செயலாளர் சகோ. N.A. முகமது யூசூப் அவர்களால் அதிரை ரயில் நிலையத்தில் கணினி முன் பதிவு அலுவலகத்திற்காக ஊழியர் ஒருவரை நியமனம் செய்வது தொடர்பாக கொடுக்கப்பட்ட மனுவை அடுத்து, இதற்காக சம்பந்தப்பட்ட தென் இந்திய ரயில்வே துறை – திருச்சி கோட்ட தலைமை அலுவலர் ( DRM ) அவர்களுக்கு கோரிக்கை மனு ஓன்று AAMF'ன் சார்பாக சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டன.

கோரிக்கை மனுவின் விவரம் :
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் – இது சேது பெருவழிச்சாலையில் அமைந்திருக்கும் கடற்கரையோர ஊர். இங்கு சுமார் அறுபது ஆயிரம் பேர் வசிக்கக்கூடிய பரந்த பகுதியாகவும், அதிக விவசாயிகளைப் பெற்ற இக்கடைமடைப் பகுதியைச் சுற்றி கடற்கரையோர கிராமங்களான ஏரிபுறக்கரை, ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம், மீமிசல் போன்ற பகுதிகளும் உள்ளன.

இவ்வூரிலிருந்து ஏறக்குறைய பதினைந்து ஆம்னி பஸ்கள் தினமும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை செல்கின்றன, அதேபோல் சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் வருகின்றன. இதனால் ஆகக்கூடிய கூடுதலான செலவுகள் ஒரு பக்கம் இருந்தாலும், இதில் பயணம் செய்யும் பயணிகள் குறிப்பாக வயோதியர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் போன்றோர்கள் பெரும் அவதிக்கும், இன்னலுக்கும் உள்ளாகின்றனர். இதுபோன்றவற்றைக் கருத்தில் கொண்டு இவர்கள் அனைவரும் விரும்புவது ரயிலில் பயணங்கள் மேற்கொள்வதையே இதற்காக டிக்கட் முன்பதிவு செய்வதற்காக தொலைதூரத்திலுள்ள பட்டுக்கோட்டை,முத்துப்பேட்டை, திருத்துறைபூண்டி போன்ற ஊர்களுக்குச் சென்று தங்களுடைய நேரம், வீண் அலைச்சல் போன்றவற்றை செலவழிப்பதோடு அல்லாமல் நீண்ட வரிசையில் நின்று காத்துக்கிடக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு தென் இந்திய ரயில்வே துறையிலிருந்து அதிராம்பட்டினம் ரயில்வே நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட முன் பதிவு செய்யும் உபகரணங்கள் அனைத்தும் இப்பணியை மேற்கொள்ள நிரந்தர ஊழியர் ஒருவர் இல்லாமல் பயனற்று முடங்கிபோய் கிடக்கின்றன.

ஆகையால் அதிராம்பட்டினம் மற்றும் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் படுகின்ற சிரமத்தைக் கருத்தில் கொண்டு, இதற்காக நிரந்தர ஊழியர் ஒருவரை பணி நியமனம் செய்து “டிக்கெட் முன் பதிவு” செய்யும் வசதியை துவக்க வேண்டுமாய் அதிகாரி அவர்களை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

9. இறுதியாக ‘துஆ’வுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றது.


குறிப்பு : 
1. நிகழ்ச்சிக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் கீழத்தெரு சங்க நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

2. AAMF’ன் அடுத்தக்கூட்டம் நமதூர் M.S.M. நகர் முஹல்லாவில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ் ! இதற்குரிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes