Saturday, July 20, 2013

AAMF (துபாய்) மேற்பார்வையில் நோன்பு கஞ்சி வினியோகம்


ஈமான்(IMAN) அமைப்பின் வேண்டுகோளின்படி- AAMF (துபாய்) மேற்பார்வையில் நோன்பு கஞ்சி வினியோகம்

அஸ்ஸலாமு அலைக்கும்அன்பிற்கினிய அமீரகவாழ் அதிரைவாசிகளுக்கும் அவர்தம்உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சங்கைமிகு ரமலான் மாதத்தின்அருட்கொடைகளை வல்லோன் அல்லாஹ் அருளட்டுமாக.ஆமீன்.



அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு (AAMF) கடந்த இருவருடங்களுக்கு முன்புஅமீரகத்திலும்அதிரையிலும் சிலபல திட்டங்களுடன் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம், மேலும் அமைப்பின் நோக்கத்தையும் இலக்கையும் நம் அனைவரின்தொடர்ச்சியான கூட்டுசெயல்பாடுகளால் விரைவில் அடைய எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கான வழிவகைகளை நமக்கு இலகுவாக்கி வைப்பானாகஆமீன்.


முஸ்லிம்கள் நிறைந்துள்ள தமிழக ஊர்களில் நமதூர் அதிராம்பட்டினம் குறித்தநல்லெண்ணம் பலரிடமும் உள்ளதை அறிந்திருப்பீர்கள்அவ்வகையில்ஐக்கியஅரபு அமீரகத்திலுள்ள ஈமான்(IMAN) அமைப்புஒவ்வொரு வருடமும் இப்தார்நோன்பு கஞ்சி மற்றும் பதார்த்தங்களை நோன்பாளிகளுக்கு துபையிலுள்ளபள்ளிகளில் விநியோகித்து வருகிறது.

அதன்படிஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு (AAMF) உருவாக்கப்பட்டபிறகு கடந்த வருடம் டேரா வாழைமரத்தடி பள்ளியில்விநியோகிக்கும் பொறுப்பை AAMF-க்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நமதூர்தன்னார்வளர்கள் சிறப்பாக செய்து நோன்பாளிகளின் துஆவைப் பெற்றார்கள்.

அதுபோல்,இவ்வருடமும் டேரா-ப்ரிஜ்முரார் பகுதியிலுள்ள ஷேக்கா லத்தீஃபாமஸ்ஜிதில்” நோன்பு கஞ்சி விநியோகம் செய்யும் பொருப்பை AAMF-இடம் தந்து, நோன்பு பிறை 3-லிருந்து நமதூர் ஒரு சில மஹல்லாஹ்வாசிகளின் பங்களிப்பில் செய்து வருகிறோம்,




நோன்பாளிகளுக்கு நோன்பு துறப்பதற்கு ஏற்பாடு செய்பவர்களுக்கான நற்கூலிஅல்லாஹ்விடம் பலமடங்கு என்பதை சொல்லத்தேவையில்லைமேலும்நமதூர்இளைஞர்களின் சேவை மனப்பான்மைமீது நம்பிக்கை கொண்டும் AAMF- சார்ந்ததன்னார்வலர்கள் (மஹல்லாவிற்கு 1 நபர் வீதம்) தங்களையும் இணைத்துக்கொண்டுஅல்லாஹ்வின் அருளைப்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு,தலைவர்
AAMF - 
துபாய் கிளை

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes