Thursday, August 8, 2013

AAMF 2013-ம் ஆண்டு - நோன்பு பெருநாள் சந்திப்பு துளிகள்…


2013-ம் ஆண்டு - நோன்பு பெருநாள் சந்திப்பு துளிகள்…
அல்லாஹ்வின் பேரருளால் 08-08-2013 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் அதிகாலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.











காலை 06:10 மணிக்கு பெருநாள் தொழுகை தொடங்கியது. சரியாக 6:40 மணிக்கு பராஹா சாலை வாசலருகே அதிரைவாசிகள் அணிஅணியாகக் கூடத்தொடங்கினர்.
சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
அதிரை தவிர்த்து கீழக்கரை, காயல்பட்டினம், லெப்பைக் குடிக்காடு மற்றும் ஓரிரு ஊரைச்சார்ந்தவர்களும் தனித்தனியாக சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டிருந்தாலும், அதிரைவாசிகள் 300 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தைக் காணமுடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
அதிகாலை (துபை) வெயிலின் வெட்கையையும் பொருட்படுத்தாமல் வேட்கையுடன் வந்திருந்த அதிரைவாசிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அல்லாஹ்வின் கிருபையால் வெயிலின் தாக்கம் சிறிதும் இல்லாமல்  இருந்தது வருகைப்புரிந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.
எங்களின் அன்பான அழைப்பை ஏற்று ஆர்வத்துடன் வந்திருந்த அனைவருக்கும் நன்றியும் துஆ-வும்.


இப்படிக்கு
நிர்வாகம்
அதிரை அனைத்து மஹல்லாஹ் கூட்டமைப்பு –AAMF
அமீரகம்

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes